செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

சிவஞான போதத்தின் 6‍வது பாடல்

சிவஞான போதத்தின் 6‍வது பாடல்,  நம்மைச்   சிந்திக்க வைப்பது ஆகும். "சிவம் எது? எங்கே இருக்கிறது?" என்ற வினாவிற்கு, உலகத்தைக் காட்டலாம். நம் கண்ணுக்குத் தெரிவது இவ்வுலகமும் இதன்கண் இருக்கின்ற படைக்கப்பட்ட பொருள்களுமே . ஆனால் இவ்வுலகு சிவத்தால் படைக்கப்பட்டதொன்றே யன்றி, சிவம் ஆகாது. காரணம்,காரியம் என்ற இரண்டனுள் உலகத்திற்குக் காரணமாகியது சிவம். உலகம் சிவத்தின் காரியம் அல்லது செயலுரு ஆகும்.
இதையே "உணர் உரு" என்கிறது இந் நூல்.

உலகம் சிவமன்று. அடுத்து யாது உள்ளது  - எது சிவம் என்ற கேள்விக்குச் சுட்டுவதற்கு? ஒன்றுமில்லை!. சூன்யம் எனப்படும் இன்மையையே சுட்டுதல்  ஆகும் (கூடும் )  . சூழவுள்ள வெட்டவெளியில் ஒன்றுமில்லை.
எனவே சூன்யம் சிவமென்று சுட்டுவதாயின், அது சிவமாகாது என்பதே கேளவிக்கான பதிலாகும். இவ்விரண்டாம் திறத்ததும் மாயைதான் . உணர ஓர் உருவற்ற இன்மையும் மாயை. உணர் உருவாகிய உலகமும் மாயையே என்பர்.

உலகத்தினும் இன்மையினும் வேறாக நிற்பதே சிவ சத்து.   அதாவது
சிவமாகிய ஒருமை. தானன்றிப் பிறிது எதுவும் தனக்கீடில்லாத சிவமாகிய ஒருமை..இச் சிவத்தொருமை உணர, உலகமும் இன்மையும் ஏதுக்களாக நின்றன என்று புரிந்துகொள்ள வேண்டும்.

இதையே ஆறாம் பாடல் கூறுகின்றது. பாடல் பார்ப்போம்.

உணர் உரு  அசத்து எனின் உணராது இன்மையின்
இரு திறன் அல்லது  சிவ சத்து  ஆமென‌
இரண்டு வகையின் இசைக்குமன்  னுலகமே.

இதனுரை பின்  காண்போம்.













கருத்துகள் இல்லை: