புதன், 10 பிப்ரவரி, 2016

சி-போதம் ஐந்தாம் பாடற் பொருளை......

முன்  இடுகை:http://sivamaalaa.blogspot.sg/2016/01/5.html


சிவஞான  போதம் ஐந்தாம் பாடற் பொருளை இப்போது அறிந்து மகிழ்வோம்.

விளம்பிய உள்ளத்து மெய் வாய் கண் மூக்கு 
அளந்தறிந்து  அறியா  ஆங்கவை போல 
தாம் தம் உணர்வில் தமியருள் 
கா ந்தங் கண்ட பசாசத்து  அவையே ,

விளம்பிய  உள்ளத்து -  முன் சொன்ன  உடற்கண் உள்ளதாகிய உயிரால்;

உள்ள அத்து  = உள்ள அது = உள்ள (உயிர்)  காரணமாக;  அது என்பது  உயிரைச்  சுட்டியது.

இங்கு அது என்பது அத்து என்று  இரட்டித்து நின்றது.

மெய்வாய் கண் மூக்கு செவி  : ( இங்கு கூறிய )  ஐந்து புலன்களும்

அளந்து  -   அளவிட்டு;

அறிந்து  -  தெரிந்து  (கொள்ளுமென்றாலும்)

அறியா  -   உண்மையில் அவை தாமே எதையும் அறியவில்லை;

ஆங்கு அவை  போல  -    அந்த ஐம்புலன்களும் தாமே அறிதல் போலும் தோற்றத்தை உண்டாக்கி ;

தம்  தமி  அருள் -  தம்    தம்மில் ஒன்றாயிருக்கும்  சிவத்தின் அருளினால்;; (அறிதல்  நடைபெறுகின்றது )

தமி =   தமித்து இயங்கும்  சிவம்;  வேறோர்  ஆற்றலின் துணையின்றி இயங்கும் .  இறைவன்;

காந்தம் கண்ட பசாசத்து  =  காந்தத்தை  அணுகிய இரும்பு  போல  ஐம்புலன்களுக்கும்  அவ்வாற்றல்  வந்து  சேர்ந்து  இயக்கத்தையும்  உணர் ஆற்றலையும்  அளிக்கும் தன்மை  அதுவாகும்,

பசாசம் - இரும்பு.    அது,    பசாசம் > பசாசம் அத்து என்று இரட்டித்தது. 
  பசாசம்   அதுவாகும் என்றபடி 

.பசாசம்  -   இச்சொல் பைசாசம் @ என்றும்  வழங்கும்.  பச்சை இரும்பு என்ற வழக்கும்  உள்ளது.    இரும்பு வேலைக்காரனால்   அடித்துச் செய்யப்படாத   இரும்பை   இது  குறிக்கும்.    பசுமை +  அசம்   =  பசாசம் . மை விகுதி கெட்டு  சகரம்  நீண்டது.    அயம் ( இரும்பு ) >  அசம்     யகரம் - சகரமாய்த் திரிந்தது.   நேயம் >  நேசம்  போல.

@   பசாசம் -  பைசாசம்   இது  பசுந்தமிழ் > பைந்தமிழ்  போன்ற திரிபு.   (  பிசாசு - பைசாசம்  என்பது வேறு .    குழம்பலாகாது. ) 

காந்தம்   <   காந்தி  இழுத்தல் .   காந்துதல்  அதன் இழுப்பு  ஆற்றலைக் குறித்தது. தீயினால்  காந்துதலோடு  ஒப்பிட்டு ச்  சொல் அமைந்துள்ளது.
சோற்றுப்பானை  சூடேறிச்   சோறு   காந்தும்போது   உள்  அடியில்  சோறு  ஒட்டிக் கொள்கிறது,   இதையறிந்த தமிழர் ,   இழுக்கும் இரும்பிலும்  உட்சூடு 
இருக்குமென்று  எண்ணி  அதைக் காந்தம்  ( காந்து ​+ அம )  என்றனர்.  இரும்புத் துண்டுகளை  உரசினால்  சூடு ஏறும்;  கூடினால் பொறிகூடப் பறக்கும்.   ஊர்மக்கட்கும்    கருமகற்கும்  இது  போதுமே!

Some changes in the commentary text were noticed and corrected.  Anti-Virus facility warned that some add-ons are making unintended changes. 





கருத்துகள் இல்லை: