ஞாயிறு, 6 மார்ச், 2016

புறப்பொருளில் தோற்றவர்க்கு இரக்கம்.



இந்தப் புறப்பொருட் கொளுவைச் சற்றுக்  காண்போம்.

அழிகு நர் புறக்கொடை அயில்வாள் ஓச்சாக்
கழிதறு கண்மை காதலித் துரைத்தன்று.

என்பது 20-ம் பாடல்.  வஞ்சித் திணையில் இது ஒரு துறை ஆகும்.

சரணடைந்தவர்களைக் குண்டுவீசித் தாக்கிய கொடியவர்க்கும் அதற்குத் துணைபோன அடுத்தார்க்கும் உண்மையில் தெரியவேண்டிய ஒரு பண்பாட்டை இக்கொளு எடுத்துக்கூறுகிறது. தோற்றவர்க்கு இரங்கிய தூயபண்பினன் இறுதியில் ஒழிக்கப்பட்டது  எத்தகு கேடு!

போரில் வன்மை அழிந்தவர் இரு கைகளையும் உயர்த்தித் தம் முதுகையும் காட்டுகின்றார். அந்த நிலையில் வெற்றி பெற்றவன்  தன் கூரிய வாளைச் சரணடைந்தோனின் முதுகில் குத்திவிடுவது எளிதுதான்.   ஆனால் குத்தக்கூடாது என்கிறது தமிழர் பண்பாடு. வாளைக் குத்தாமையே வீரப் பண்பாடு என்கிறது.  இதைப் பக்கலில் நின்று கண்டோர் அந்த வீரப் பண்பினைக் காதலிக்கின்றனர் என்கிறது நம் புறப்பொருள் இலக்கணம்.

சரணடைந்தோனைக் குத்துதல் கோழைமை.  அவனைக் காப்பாற்றுவதே  வீரம்.

வஞ்சியில் இது தழிஞ்சித் துறை ஆகும்.


You may continue reading on this topic . Click for more:


வென்றபின் பகைவனுக்கு அருள்செய்
http://sivamaalaa.blogspot.sg/2014/07/blog-post_24.html


சேரனுடன்  மோதாதே
http://sivamaalaa.blogspot.sg/2014/07/blog-post_39.html


போர்த் தந்திரங்கள்
http://sivamaalaa.blogspot.sg/2016/03/blog-post_91.html


கருத்துகள் இல்லை: