ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

சிவஞான போதத்தின் 9ம் பாடல்

ஊனக் கண் பாசம் உணராப்  பதியை
ஞானக் கண்ணினில் சிந்தை நாடி
உராத் துனை  தேர்த்து;எனப் பாசம் ஒருவ
தண்ணிழலாம் பதி; விதி எண்ணும் அஞ்செழுத்தே.

இது சிவஞான போதத்தின் ஒன்பதாம் பாடல்.

இதன் பொருளைச்  சுருக்கமாக நோக்குவோம்.

ஊனக் கண் = குறையுடையன வாகிய விழிகள் ;

பாசம்  = சடப் பொருள்களை உண்மையென்று உணரும் அறிவு ;

பதியை உணரா =  இவற்றால்  சிவத்தை அறிய இயலாது.

ஞானக் கண்ணினில் சிந்தை நாடி  -  ஞானக் கண்களால் மனத்தை நிலை  நிறுத்தி உணர்ந்து;

உராத்துனை தேர்த்து  = விரைந்து செலுத்தப்படும்  தேரின் தன்மையது

எனப் பாசம் ஒருவ -   என்று பிறழ்வுணர்வினை  விலக்க


விதி எண்ணும் அஞ்செழுத்தே.  =   உறுதி செய்யப்பட்டபடி ஐந்தெழுத்தைச்
சிந்திக்க


தண்ணிழலாம் பதி  -  சிவத்தை அறியலாகும். அருள் பெறலாம்,

ஊனக் கண்களோ  சடப் பொருள்களை அன்றிப் பிற அறிய மாட்டா;  பாச அறிவோ எனின்  நிலை அற்றவற்றை நிலையானவை என்று பிறழ உணரும்;
இவை இரண்டாலும் பயனில்லை.   இவை விரைந்து செல்லும் தேர் போன்ற  தன்மையை நம்முள் உய்ப்பவை;    இவற்றை விலக்கி  பஞ்சாட்சரத்தைக்
கைக்கொள்ளப் , பதியாகிய சிவத்தின் இன்குளிர் அருள் கிட்டுவவதாகும்.

விரைந்து செல்லும் தேரினால் யாருக்கும் பயனில்லை.  அதனில் அமைவுற்ற சிலையைக் கையெடுத்துக் கும்பிடக் கூடப் பத்தனுக்கு  (இறைப்பற்றாளனுக்கு )  முடிவதில்லை. அத்தகைய தேரினைப் பேய்த்தேர்  என்றனர்.

இவற்றைப் பின் விரித்துணர்வோம்,

Previous post on this subject went missing owing to some software error, This was rewritten.











கருத்துகள் இல்லை: