வியாழன், 14 ஏப்ரல், 2016

இடையில் யகர ஒற்றுக் கெடுதல்

இதனையும் நீங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

தாதி தாதிமார் என்ற சொல் எங்ஙனம்  அமைந்தது?

தாதி என்ற சொல்லின் முந்து வடிவம் தாய் என்பதே.  அது தி என்ற சொல்லாக்க விகுதி புணர்த்தப்பட்டுள்ளது.

தாய் + தி =  தாய்தி  >  தாதி.

எனவே யகர ஒற்று மறைந்தது.

சொற் புனைவில் இது இயல்பு.   எடுத்துக்காட்டாக:

வாய்+ தி >  வாய்த்தி  > வாத்தி
வாய் பாடம் படித்துக் கொடுப்பவர் .

பணிவுப் பன்மை ஆர் விகுதி பெற்று:

வாத்தியார்  ஆகிறது.

உப + அத்தியாயி  =  உபாத்தியாயி , உபாத்தியாய  என்ற சமஸ்கிருதம்
வேறு  என்பதை முன் விளக்கியதுண்டு.  ஆங்குக் காண்க.

தேய்+கு +அம்  = தேய்கம் >  தேகம்  ( அழிதலை உடைய உடல் )

உய்த்தல்
உய் + த் + இ =  உய்த்தி  > உத்தி  >  (யுக்தி )  உய்த்துணரப்படுவது .


continue reading next relevant post:
  http://sivamaalaa.blogspot.com/2016/04/blog-post_16.html

கருத்துகள் இல்லை: