திங்கள், 2 மே, 2016

வம்மின் (சொல்வடிவம் ) > வம்மிசம்


இச்சொல் எங்ஙனம்  அமைந்தது  என்பதை  இங்கு விளக்கி இருந்தோம்

வம்மின் (சொல்வடிவம் )  >   வம்மிசம்

http://sivamaalaa.blogspot.sg/2014/07/blog-post_30.html



வருமின் என்பது வம்மின் என்றும் வரும். --  என்றால் வருக என்று பொருள்.

" நாள் முறை தபுத்தீர் வம்மின் ஈங்கு என "

என்ற புறநானூற்று வரியில் ( பெருந்தலைச் சாத்தனார்  - பாடல் 294) இதைக் காணலாம் .

வ + மிசை + அம்  =  வம்மிசம்

தலைமுறைகள் மென்மேலும் வந்துகொண்டிருப்பதே வம்மிசம் .

மிசை - மேல்.

இதில் ஐகாரம் கெட்டது .

இது ஒரு நாட்டுப் புற வழக்குச் சொல்.

கிழவியர் திட்டுப்போது " உன் வம்மிசம் கருவற்றுப் போக " என்று அலறுவர்.

வா என்ற பகுதி  வ என்று திரியும்.

வா  >  வந்தான் ;  

வா>  வருக. (அதாவது  வாருக  அன்று )

வா > வரு . அல்லது  வரு> வா .

வா  முதலா  வரு முதலா என்பது இருக்கட்டும்.

  


கருத்துகள் இல்லை: