ஞாயிறு, 12 ஜூன், 2016

சாத்திரம் > சாஸ்திரம்

தமிழ்போன்ற அல்லது அதனுடன் தொடர்புடைய ஏனை மொழிகளை ஆராயும் போது மனித வளர்ச்சி நூலின் கருத்துகளையும் மனத்தின் பின்புலத்தில் வைத்துக்கொள்வது இன்றியமையாதது ஆகும்,

இற்றை நாகரிக நிலையை அடையுமுன் அவன் பல வளர்ச்சிப் படிகளைக் கடந்துவர வேண்டியதாய் இருந்தது. குகைகளிலும் மரக்கிளைகளிலும் வாழ்ந்த காலத்தில் அவன் பயந்துகொண்டிருந்தது சாவிற்கே ஆகும். சாவினைவிட அவனையுலுக்கிய பெருஞ்சிந்தனைக்குரிய வேறொரு நிகழ்வு யாண்டுமிலது, அவனது மரண அச்சமே இறைவனைப் பற்றிய எண்ணங்களைத் தோற்றுவித்தன. இறந்தபின் வெற்றுடல் கிடக்க, இறந்தோனின் உயிர் எங்கே போயிற்றென்று அவன் கவன்றான். சாவின் திறமறிய அவன் முயன்று பல சிந்தனைகளையும் உண்டாக்கி சமயகருத்துக்களையும் காலம் செல்லச் செல்லப் படைத்துக்கொள்வானாகினான்.

சாத்திறம் > சாத்திரம் - சாஸ்திரம். சாவின் திறமறி கலை.


நாளடைவில் இது ஏனைக் கருத்துக்களையும் உள்ளடக்குவதாயிற்று.

மரணத்தின் பின் மனிதன் நிலை யாது?   சாவின் திறன் விளக்கிய   கலைஞர்
ஆன்மா வேறு  உயிர் வேறு என்றும்  ஆன்மா அழியாதது  என்றும்  அது இறைவனை  அடைதற்குரியது  என்றும் தெளிவிக்க முயன்றனர்.   அழியும்  நிலையற்ற  உடலுக்கு  அழியாத ஆன்மா ஒன்று இருப்பது ஒருவாறு சாக்கவலையைத் தீர்ப்பதாக நின்று  சாவு கண்டு மனம் இடிந்துபோன மனிதனைத் தேற்றுவதாய் அமைந்தது.  இதுவும் சாத்திறம் >  சாத்திரம் >  சாஸ்திரமே. சாத்திரம்  வளர்ந்தது/

இப்படி மனித வளர்ச்சியின் பல படிகளைக் காட்டும்  வரலாற்றுச் சொல்லாக 
சாத்திரம்  >  சாஸ்திரம் என்ற சொல்  அமைந்துள்ளது அறிந்து மகிழற்பாலதாம்.

கருத்துகள் இல்லை: