திங்கள், 6 ஜூன், 2016

குறுந்தொகை: நாட்டு / விலங்குகள் வருணனை.

புரிமட மரை ஆன் கரு நரை நல் ஏறு
தீம்புளி நெல்லி மாந்தி அயலது
தேம்பாய் மாமலர் நடுங்க வெய்துயிர்த்து
ஓங்குமலைப் பைஞ்சுனை பருகு நாடன்
நம்மை விட்டு அமையுமோ மற்றே கைம்மிக‌
வடபுல வாடைக் கழி மழை
தென்புலம் படரும் தண்பனி நாளே 


இது மதுரைக் கண்டரதத்தனார் பாடிய குறுந்தொகை 317‍வது இனிய பாடல். இதில் புலவர் தலைவனின் நாட்டு வளக் காட்சிகளைச் 
சுவை  சொட்ட வரிகளாக்கியுள்ளார். ,

தலைவனின் நாடு உயர்ந்த மலையை உடையது, அங்கே பசுமையான ஊற்றுநீர் கிடைத்தது, அதைப் பருகி உடல்நலம் மிக்கவனாய் அவனிருந்தான் என்பது தோன்ற பைஞ்சுனை பருகு  நாட்டவன் என்கிறார், நாடன் என்பது குறிஞ்சி நிலத் தலைவனைக் குறிக்கும். குறிஞ்சி என்பது மலையும் மலைசார்ந்த இடமும் ஆகும்.

குறிச்சி என்பது அங்குள்ள ஊர். உதாரணம், கடுக்காக்குறிச்சி. ஓங்குமலை என்று புலவர் பாடுதல் காண்க‌.


மான் மரை என்று சொல்லப்படும் இனத்துள் இங்கு மரை பற்றிப் பாடலில் வருகிறது. மரை ஆன் என்றால் பெண்மரை. இது மிகுந்த‌
மடம் உடையது. அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்று கூறுவர் இவற்றுள் சொல்லப்படும் மடம்,      புரிமடம் என்றது ஆண்மரை மிக‌
விரும்பும் பெண்மரையின் மடம். அதாவது ஆண்மரை அறிந்த எல்லாம் பெண்மரை அறிந்திருப்பதில்லை. . அது பெண் என்பதனால்;
இதன்  (இவ்வறியாமையினால்  அது  ஆண் மரையிடத்து நடந்துகொள்ளும் விதங்களின் )  தொகையே மடம் எனப்படுகிறது. இந்த மடப்பத்தை ஆண்மரை விரும்புகிறது.


இந்த ஆண் மரையானது, கரியது: அதாவது கரு நிறத்தது; நரை என்றதனால் பெண்மரையை  நோக்கின் உருவிற் பெரியது. நல்ல குணங்கள் உடையது. எனவே கரு நரை நல் ஏறு என்றார் புலவர்.' நரை என்பது பெருமையாகும்.

(தொடரும்) .






கருத்துகள் இல்லை: