திங்கள், 15 பிப்ரவரி, 2016

சிவ,போதம் பா,5 உவமை நயம்

முன் இடுகை  http://sivamaalaa.blogspot.sg/2016/02/blog-post_56.html   இங்குக்  தொடர்கிறது . பாடல் மற்றும்   அதன் பொருள்  அவண் காண்க .  உவமை  நயம் மட்டும் இங்குக்  காண்போம்/


ஐந்தாம் பாடல் காந்தக் கல்லின் முன்னிருப்பினால் இரும்புத்  துண்டு அசைவு கொள்வதுபோல்,  சிவம் முன்னிருப்பதனால் உயிரர்கள் விடையங்களை அறியலாகின்றது என்று தெளிவுறுத்தியது.

இவ் வுவமையின் நயம்  அறிந்து இன்புறுகிறோம்.   இரும்பு காந்தத்தினால் ஈர்க்கப்படினும் இரும்பே அவ்வீர்ப்பினால் அசைவதன்றி  காந்தத்துக்கு எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை.

இறைவன் முன்னிற்பினால் உயிரர்கள் விடைங்களை அறிதலாற்றல்
பெற்று இயங்குதல் நடைபெறுகின்றதெனினும் இதனால் இறைவற்கு மாறுதல் அசைவு யாதும் உண்டாவதில்லை. அவன் யாண்டும் முன்னிருந்தபடியே இருக்கின்றான்.

எனவே காந்த உவமை மிக்கப் பொருத்தமாய இனிய உவமை என்பது உணரப்படும்,

உயிரர்கள் என்றும் சித்துருவாய் உள்ளனர். ஆனால் அவர்கள் மெய் வாய் முதலான இந்திரியங்கள் அல்லது பொறிகள் போலும் சடங்கள் அல்லர். இவ்விந்திரியங்கள் உயிரர்களின் உறுப்புகளாயிருந்து அறிபொருளை உள்வாங்கி உயிரர்கட்கு அறிவிக்கின்றன எனினும்
அவை சடப்பொருள்களே. அவை உயிரரை இல்லாமல் இயங்க வல்லன அல்ல. அவைகட்கு தன்னியக்கம் இல்லை.  உயிரனுக்கும் இறையின்றித் தன்னியக்கம் இலது, உயிரும் உறுப்புகளும் இறையை எதிரிட்டு இயங்குவனவல்ல. உயிர் இறைச்சார்பும் இந்திரியங்கள் உயிரன் சார்பும் உடைமை அறிக. சார்பின்மை இயக்கம் இவற்றுக்கில்லை.

will edit and review later


கருத்துகள் இல்லை: